“அட்வைஸ் சொல்றவங்க அப்பால போங்க...” நயன்தாராவின் இந்த துடுக் பேச்சால் நமக்கெதுக்கு என்று ஒதுங்கிக் கொண்டார்கள் அவருக்கு நெருக்கமான அட்வைசர்கள்.
அவிழ்த்து விட்ட கன்னுக்குட்டிக்கு தொட்டின்னு தெரியுமா? பட்டின்னு புரியுமா? துள்ளி ஓடி தொட்டியிலே விழுந்த மாதிரி தப்பு தப்பாக முடிவெடுப்பதாக புலம்புகிறார்கள் அந்த நெருக்கமானவர்கள்.
லேட்டஸ்ட் புலம்பல் இது. “யாரையும் கேட்காமலேயே கோவா படத்தில் ஒரு பாடலுக்கு ஆட சம்மதிச்சாரு. சரி போகட்டும் என்று விட்டால் இப்போது மீண்டும் ஒரு படம். எப்படிதான் புரியப் போவுதோ” என்கிறார்கள். மாப்பிள்ளை படத்தில் ஒரு பாடலுக்கு ஆட சம்மதித்திருக்கிறாராம் நயன்தாரா. “இப்படியே அவரு முக்கியம், இவரு முக்கியம்னு ஆட ஆரம்பிச்சா நயன்தாராவுக்கு போட்டியா ரகசியாதான் வந்து நிப்பாரு” என்று அழாத குறையாக சொல்கிறார்கள் அவர்கள். போகட்டும்... இன்னொரு சங்கதி.
முதல்வர் கையால் வழங்கப்பட்ட கலைமாமணி விருதை வாங்க ஏன் வரவில்லை என்பதற்கு விளக்கம் அளித்திருக்கிறார் நயன். அந்த விருது வழங்கப்பட்ட நாளில் இவர் வெளிநாட்டில் இருந்தாராம். படப்பிடிப்பை விட்டு விட்டு வர இயலாது என்பதால்தான் வராமல் இருந்துவிட்டாராம்.
சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லியாச்சு என்கிறார் அவர். அப்படின்னா சரி...
படத்தில் நடிக்கும் ஹீரோயின். படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்திருந்தாலும், பிரஸ்மீட்டுக்கு அவர் வந்திருந்த கோலம் “ச்சும்மா அதிருதில்லே...” டைப்! முழங்காலுக்கு மேலே ஏறிய ஸ்கர்ட் அணிந்திருந்தார். மினி நமீதா மாதிரி இருக்கீங்களே என்ற காம்பிளிமெண்ட்டை சற்று கவலையோடு ஏற்றுக் கொண்ட அவர், “சும்மா உங்களையெல்லாம் இம்ப்ரஸ் பண்ணலாமேன்னுதான் இப்படி வந்தேன். மற்றபடி வீட்டிலே கூட நைட்டிதான் எனக்கு பிடிக்கும்” என்றார். “இனி சென்னைக்கு வந்து உங்களை சந்திக்கும்போதெல்லாம் இப்படிதான்” என்று அவர் சொன்னது இன்ப அதிர்ச்சி!







0 comments:
Post a Comment