surya's best movie

View Results
Create a Blog Poll

Friday, December 11, 2009

MailPrint பாட்டு ஒரே பாட்டு... நயன்தாராவே நிப்பாட்டு!


“அட்வைஸ் சொல்றவங்க அப்பால போங்க...” நயன்தாராவின் இந்த துடுக் பேச்சால் நமக்கெதுக்கு என்று ஒதுங்கிக் கொண்டார்கள் அவருக்கு நெருக்கமான அட்வைசர்கள்.
அவிழ்த்து விட்ட கன்னுக்குட்டிக்கு தொட்டின்னு தெரியுமா? பட்டின்னு புரியுமா? துள்ளி ஓடி தொட்டியிலே விழுந்த மாதிரி தப்பு தப்பாக முடிவெடுப்பதாக புலம்புகிறார்கள் அந்த நெருக்கமானவர்கள்.

லேட்டஸ்ட் புலம்பல் இது. “யாரையும் கேட்காமலேயே கோவா படத்தில் ஒரு பாடலுக்கு ஆட சம்மதிச்சாரு. சரி போகட்டும் என்று விட்டால் இப்போது மீண்டும் ஒரு படம். எப்படிதான் புரியப் போவுதோ” என்கிறார்கள். மாப்பிள்ளை படத்தில் ஒரு பாடலுக்கு ஆட சம்மதித்திருக்கிறாராம் நயன்தாரா. “இப்படியே அவரு முக்கியம், இவரு முக்கியம்னு ஆட ஆரம்பிச்சா நயன்தாராவுக்கு போட்டியா ரகசியாதான் வந்து நிப்பாரு” என்று அழாத குறையாக சொல்கிறார்கள் அவர்கள். போகட்டும்... இன்னொரு சங்கதி.

முதல்வர் கையால் வழங்கப்பட்ட கலைமாமணி விருதை வாங்க ஏன் வரவில்லை என்பதற்கு விளக்கம் அளித்திருக்கிறார் நயன். அந்த விருது வழங்கப்பட்ட நாளில் இவர் வெளிநாட்டில் இருந்தாராம். படப்பிடிப்பை விட்டு விட்டு வர இயலாது என்பதால்தான் வராமல் இருந்துவிட்டாராம்.

சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லியாச்சு என்கிறார் அவர். அப்படின்னா சரி...

0 comments:

Post a Comment

all indian cinema © 2008. Design by :Yanku Templates Sponsored by: Tutorial87 Commentcute
This template is brought to you by : allblogtools.com Blogger Templates