
சிறுத்தையை வேட்டையாடுவதுதானே வேட்டைக்காரனின் வேலை? ஆனால் சினிமா சிறுத்தையை அதே சினிமா வேட்டைக்காரன் கொன்று விட்டானே... என்று புலம்பல் சத்தம் கேட்கிறது கோடம்பாக்கத்தில்.அரசல் புரசலாக ஆரம்பித்தாலும் நேரடியாக மேட்டருக்கு வருவோம். 'சிறுத்தை' என்ற படத்தை கார்த்தி, சூர்யா சகோதரர்களின் உறவினரான ஞானவேல் என்பவர் தயாரிக்க முடிவானது. இவர்தான் 'பருத்தி வீரன்' பட தயாரிப்பாளர். இதற்காக 'விக்கிரமார்குடு' என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் ரைட்சை வாங்கி வைத்திருந்தார்களாம் இவர்கள்.
'வேட்டைக்காரன்' படத்தை மற்றவர்களை போலவே ஆர்வமாக பார்க்க கிளம்பிய சகோதரர்களுக்கு ஆத்திரமான ஆத்திரமாம். வேட்டைக்காரனில் வந்த பாதிக்கும் மேற்பட்ட காட்சிகள் 'விக்கிரமார்குடு' படத்தின் சீன்களை தழுவி அமைக்கப்பட்டுள்ளதாம். இப்படி படத்திலுள்ள சரக்கையெல்லாம் உருவி விட்டால் மிச்சத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதாம்? இதுதான் சகோதரர்களின் கோபத்திற்கு காரணம்.
இப்படி 'உருவி' கதை பண்ணிய இயக்குனரை விட்டு விட்டு விஜய்யை குறை சொல்வானேன்? என்று இன்னொரு புறம் சமாதானம் செய்து கொண்டார்களாம் அதே அண்ணன் தம்பிகள். சினிமா கோபம் சில நிமிடங்கள்தானே நீடிக்கும்...
படத்தில் நடிக்கும் ஹீரோயின். படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்திருந்தாலும், பிரஸ்மீட்டுக்கு அவர் வந்திருந்த கோலம் “ச்சும்மா அதிருதில்லே...” டைப்! முழங்காலுக்கு மேலே ஏறிய ஸ்கர்ட் அணிந்திருந்தார். மினி நமீதா மாதிரி இருக்கீங்களே என்ற காம்பிளிமெண்ட்டை சற்று கவலையோடு ஏற்றுக் கொண்ட அவர், “சும்மா உங்களையெல்லாம் இம்ப்ரஸ் பண்ணலாமேன்னுதான் இப்படி வந்தேன். மற்றபடி வீட்டிலே கூட நைட்டிதான் எனக்கு பிடிக்கும்” என்றார். “இனி சென்னைக்கு வந்து உங்களை சந்திக்கும்போதெல்லாம் இப்படிதான்” என்று அவர் சொன்னது இன்ப அதிர்ச்சி!







0 comments:
Post a Comment