அக்ஷய் குமாருடன் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து பிசின் போட்ட மாதிரி அவருடன் ஒட்டிக் கொண்டாராம் இந்த மத்ராஸ் மாமி (த்ரிஷாவின் பாலிவுட் செல்லப் பெயர்) முதல் நாள் அம்மா உமா துணையுடன் போனாராம், படப்பிடிப்புக்கு.
அதைப் பார்த்த அக்ஷய், 'ஆண்டிக்கு ஏன் இவ்வளவு சிரமம்... நாங்க பூப்போல பாத்துக்குவோம்' என்ற ரேஞ்சுக்கு வாக்குறுதி தர, அடுத்த நாள் மும்பை கெஸ்ட் ஹவுசிலேயே உமா நின்று விட்டாராம். இப்போது ஸோலோவாகக் கலக்குகிறாராம் அம்மணி.
இந்த ஒத்துழைப்பைப் பார்த்துப் புல்லரித்துப் போன அக்ஷய், அடுத்த படத்துக்கும் ஹீரோயின் த்ரிஷாதான் என 'உயிலே' எழுதி விட்டாராம்... அதாவது அக்ரிமெண்டைச் சொல்றோம்.
அதேநேரம் தெற்கிலிருந்து இப்போது யாரராவது கால்ஷீட் கேட்டு வந்தால் மகா கடுப்புடன் முறைக்கும் நடிகை தரப்பு, கண்டு கொள்ளாமல் அக்ஷய் குமாரின் 'ஆ' ஜோக்குகளைக் கேட்டு ஹாஹாஹா என விழுந்து விழுந்து சிரிப்பதில் முழுகி விடுகிறாராம்.
தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்தவர், தமிழில் விக்ரமுடன் நடிப்பதற்கும் நோ சொல்லி விட்டாராம்.
வடநாட்டு பழமும் ஒரு நாள் புளிக்கும்!
படத்தில் நடிக்கும் ஹீரோயின். படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்திருந்தாலும், பிரஸ்மீட்டுக்கு அவர் வந்திருந்த கோலம் “ச்சும்மா அதிருதில்லே...” டைப்! முழங்காலுக்கு மேலே ஏறிய ஸ்கர்ட் அணிந்திருந்தார். மினி நமீதா மாதிரி இருக்கீங்களே என்ற காம்பிளிமெண்ட்டை சற்று கவலையோடு ஏற்றுக் கொண்ட அவர், “சும்மா உங்களையெல்லாம் இம்ப்ரஸ் பண்ணலாமேன்னுதான் இப்படி வந்தேன். மற்றபடி வீட்டிலே கூட நைட்டிதான் எனக்கு பிடிக்கும்” என்றார். “இனி சென்னைக்கு வந்து உங்களை சந்திக்கும்போதெல்லாம் இப்படிதான்” என்று அவர் சொன்னது இன்ப அதிர்ச்சி!







0 comments:
Post a Comment